Pages - Menu

Thursday, 27 February 2014

வரையறை


வாழ்வில் எவ்வளவோ விஷயங்களில், அது நமக்கு சரிவராது, நமக்கு, நம் உடம்புக்கு நல்லது அல்ல, என்று தெரிந்த பொழுதும் நம்மால் அவ்விஷயங்களை விட்டு விலக முடியாது.

தினமும் இது தொடரக் கூடாது என்று சொல்லிக்கொண்டே அதை செய்து கொண்டிருப்போம். ஆனால், என்றாவது நம்மை அறியாமலே ஒரு பொறி கிளம்பி நம் மனது அதிலிருந்து விலக ஆரம்பித்துவிடும்.
அந்தப் பொறி தோன்றும் வரை திண்டாட்டம் தான்.
...

எப்பொழுது அதை விலக்க வேண்டும் என்று உங்கள் மனது முடிவெடுத்துவிட்டதோ கண்டிப்பாக உங்க வாழ்வில் முன்னேற்றம் தான்..

குடிப்பழக்கம், சிகெரட் என்பது போன்ற விஷயங்களிலிருந்தும் நம்மால் விட்டு விலகி வரமுடியும்.

நம் செயலால் நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் எந்த பாதிப்பும் உண்டாக்காது இருப்போம்.


வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment